tamilnadu

img

உயர்நீதிமன்றத்தில் 6 நீதிபதிகள் நியமனம்

சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகள் 6 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதிலகம், தாரணி, ராஜமாணிக்கம், கிருஷ்ணவள்ளி, பொங்கியப்பன், ஹேமலதா ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக இருந்து வருகின்றனர். அவர் களை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 17 இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

;