tamilnadu

img

அப்பல்லோ மருத்துவர்கள், டெக்னீசியன்களுக்கு ஆணையம் சம்மன்

சென்னை, ஏப்.24- அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் டெக்னீசியன்களுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அப்பல்லோ மருத்துவர்களுக்கு சம்மன்அனுப்பியிருந்தது. இந்நிலையில், மருத்துவக்குழு அமைத்தால் மட்டுமே தங்கள் மருத்துவர்கள் ஆஜராவார்கள் என சென்னை உயர் நீதிமன்றத் தில் அப்பல்லோ நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. அதில், ஆணையம் விசாரிக்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இதை எதிர்த்து அப் பல்லோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி கடந்த 10 ஆம் தேதி மருத்துவர்கள் ஆணையத்தில் ஆஜராகவில்லை. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 26 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் 25 ஆம் தேதி ஆஜராகும் படி 10 மருத்துவர்கள் உட்பட 12 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

;