tamilnadu

அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜராகவில்லை

சென்னை, ஏப்.25- நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு, அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த 10 மருத்துவர்கள் உட்பட 12 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர்கள் வியாழனன்று ஆஜராகவில்லை. ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சி அளிக்கும் போது தாங்கள் கூறும் தரவுகள் தவறாக புரிந்துகொள்ளப்படுவதாகவும், எனவே மருத்துவக் குழு அமைக்கப்பட்டு அதன் முன்னிலையில் தங்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரி அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேல் முறையீட்டு வழக்கு வெள்ளியன்று விசாரணைக்கு வரவிருப்பதால்ஆஜராகவில்லை என அப்பல்லோ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்றுக்கொண்டுள்ள ஆறுமுகசாமிஆணையம், அப்பல்லோ மருத்துவர்கள் உள்ளிட்டோர்வெள்ளியன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

;