tamilnadu

img

துரைமுருகன் கோரிக்கை ஏற்பு

சென்னை:
சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசிக் கொண்டிருந்த போது திமுக உறுப்பினர் ஆஸ்டின் இருக்கையில் அமர்ந்தபடியே சில கருத் துக்களை தெரிவித்தார்.இதனையடுத்து அவைமுன்னவர் ஓ.பன்னீர்செல் வம், ஆஸ்டின் மீது நடவடிக்கைஎடுக்குமாறு பேரவைத் தலைவரை கேட்டுக் கொண்டார். அதனையேற்று, ஆஸ்டினைஅவையை விட்டு வெளியேற்றுமாறு அவைக்காவலர்களுக்கு உத்தரவிட்டார்.அப்போது பேசிய எதிர்க் கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், தங்கள் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து ஆஸ்டின் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.

;