tamilnadu

img

கொரோனா தடுப்புக்காக 675 மருத்துவர்கள் நியமனம்

சென்னை:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் மேலும் 675 மருத்துவர்களை நியமிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 675 புதிய மருத்துவர்களை 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப் படுகிறார்கள். மருத்துவர்களுக்கு 40 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்க முடிவு செய் யப்பட்டுள்ளது.மேலும் தேசிய நலவாழ்வு இயக்கத் தின் மூலம் மருத்துவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் உடனடியாக பணியில் சேரவும் தேவைகருதி பணி நீட்டிப்பு செய்யப் படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

;