tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா.... சென்னையில் மட்டும் 28 

சென்னை
தமிழகத்தில் கொரோனா பரவல் ஜெட் வேகத்தில் உள்ளதால் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சியில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் சில மாவட்டங்களில் இன்று ஒருநாள் முழு ஊரடங்கு வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 1885 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1020 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாகச் சென்னையில் 28 பேரும், விருதுநகரில் 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது. 
 

;