tamilnadu

img

காவல்துறை அலட்சியத்தால் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

காஞ்சிபுரத்தில் வீட்டு அருகே நின்று கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை ஏப்.3 அன்று சமூக விரோத கும்பலைச் சேர்ந்தவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.கோவை துடியலூரில் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப் பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மனதிலிருந்து இன்னும் நீங்காத நிலையில், காஞ்சிபுரத்தில் மனநலம் பாதிக்கப் பட்ட சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளானது தமிழக மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரமான சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டித்துள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத் திருக்கும் அறிக்கை வருமாறு:-சம்பவத்தன்று மாலை 5 மணி வாக்கில் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என புகார் கொடுத்துள்ளனர். அப்போதே காவல்துறை செயலில் இறங்கியிருந்தால் சிறுமியை மீட்டிருக்க முடியும். ஆனால் காவல்துறை காலம் கடத்தியதன் விளைவாக, அச்சிறுமி அன்றிரவு முழுவதும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு உடல் முழுவதும் காயங்களுடன் ரோட்டில் வீசப்பட்டுள்ளார். 


பொள்ளாச்சி, கோவை துடியலூர் என அடுக்கடுக்கான சம்பவங்கள் நடைபெற்ற போதிலும் காவல்துறை துடிப்புடன் செயல்பட மறுத்து வருவது ஆழ்ந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது.இச்சம்பவம் குறித்து காவல் துறை கண்காணிப்பாளரிடம் நேரில் புகார் தெரிவிக்கச் சென்ற அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளின் சங்கத் தலைவர்களிடம் காவல் துறை கண் காணிப்பாளர் உண்மைக்கு மாறாக பாதிக்கப்பட்ட சிறுமி மாற்றுத் திறனாளி இல்லை எனவும், வழக்கின் முதல் தகவல் அறிக்கை பெற்றோருக்கு அளிக்கப்பட்டது என்றும் கூறி குழப்ப முயற்சி செய்துள்ளது வன் மையான கண்டனத்திற்குரிய செயலாகும்..காஞ்சிபுரத்தில் இதுபோன்று தொடர்ந்து செயல்பட்டு வரும் சமூக விரோதக் கும்பல் இச்சம்பவத்திற்கு பின்னால் இருப்பதாக கருத வேண்டியுள்ளது. வழக்கை மூடிமறைக்கவும், புகாரை திரும்பப் பெற வேண்டுமெனவும் இக்கும்பல் நிர்ப் பந்தப்படுத்தி வருவதாகவும், இதன் காரணமாகவே காவல்துறை மெத்தனமாக இருப்பதாகவும் தோன்றுகிறது.எனவே, தமிழக அரசு வேறு பொருத்தமான மூத்த பெண் காவல் துறை அதிகாரியைப் பொறுப்பாக நியமித்து இவ்வழக்கை விசாரிக்க வேண்டுமெனவும், இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டுமெனவும், வழக்கு முடியும் வரை கைது செய்யப்பட்டுள்ளவர்களை ஜாமீனில் வெளிவராத வகையில் உரிய விழிப்புடன் இருந்து இவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.புகார் அளித்துள்ள குடும்பத்தினருக்கு சமூக விரோத சக்திகள் மூலம் மிரட்டல்கள் விடப்படாமல் இருப்பதற்கு உரிய காவல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.


நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்: ஜான்சிராணி


காஞ்சிபுரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மனவளர்ச்சி குன்றிய சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆறுதல் கூறினர். பிறகு, மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தது குறித்து சங் கத்தின் மாநிலத் தலைவர் ஜான்சிராணி செய்தியாளர்களிடம் கூறுகையில்,“ இச் சம்பவம் குறித்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை திரும்பப் பெறவேண்டும் என்று மறைந்த பிரபல ரவுடி சிறீதரின் அடியாட்கள் மிரட்டி வருகிறார்கள் என்றும் அந்த குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இந்த வழக்கில் 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண் டும். பாலியல் வன்கொடுமை நடத் தப்பட்ட கட்டிட உரிமையாளரை வழக்கில் இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். அச் சிறுமியின் குடும்பத்தை எங்கள் சங்கம் பாதுகாக்கும் நீதி கிடைக் கும் வரை போராடுவோம் என்றும் ஜான்சிராணி கூறினார்.சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.நம்புராஜன், துணைத் தலைவர் ப.சு.பாரதி அண்ணா, மாவட்டத் தலைவர் முனுசாமி, செயலாளர் அரிகிருஷ்ணன், பொருளாளர் பாலாஜி, சிபிஎம் நகரச் செயலாளர் சி.சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


;