tamilnadu

img

10 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை ஜுன் மாதம் வெளியிடப்படும்   அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

 கோபிசெட்டிபாளையம், மே. 5 - 10 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை ஜுன் மாதம் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள அனைத்து மக்களுக்கும் முட்டை விநியோகம் செய்யும் நிகழ்வில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தவுடன் ஜூன் மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும் கல்வி தொலைக்காட்சி மூலமும் தேர்வுப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.  மேலும், தமிழகத்தில் தற்போதைய சூழலில் உயிரினை துச்சமெனக் கருதி கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறையினர், காவல்துறையினர், மருத்துவத்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். அதோடு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தங்கியிருந்த பொதுமக்கள் அனைவரும் அரசுக்கு உறுதுணையாக இருந்து பொறுமை காத்ததற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

;