science

img

அதிகமாக இனிப்பு பானங்கள் குடிப்பதால் புற்று நோய் அபாயம் - ஆய்வு தகவல்

அதிகமாக இனிப்பு பானங்கள் குடிப்பதால் புற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வு தகவல் ஒன்று பிரிட்டிஷ் மருத்துவ இதழில் வெளியாகி உள்ளது.

இனிப்பு சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள், பழச்சாறுகள் மற்றும் செயற்கை முறையில் உருவாக்கப்படும் இனிப்பு சுவை நிறைந்த குளிர்பானங்கள் உடல் நலத்துக்கு கேடுகளை விளைவிப்பதாக சர்வதேச ஆய்வறிக்கைகள் தெரிவித்தன.
உடல் பருமனால் பல விதமான புற்று நோய்களை ஏற்படும் அபாயம் இருப்பதாக  தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதை தொடர்ந்து பிரான்சில் உள்ள பாரிஸ் பல்கலைக்கழகம் ஒரு அதிரடி ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 1,01257 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் 21 சதவீதம் ஆண்களும், 79 சதவீதம் பெண்களும் அடங்குவர். 

இவர்களிடம் ஆய்வு மேற்கொண்டபோது, அவர்கள் தினமும் குடிக்கும் குளிர்பானங்கள் மற்றும் செயற்கை முறையில் தயாரிக்கப்படும் இனிப்பு வகை பானங்கள் கணக்கிடப்பட்டன. அதன் அடிப்படையில் சிலருக்கு மார்பக புற்று நோய், குடல் புற்று நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் இனிப்பு வகையான குளிர்பானங்களை அதிக அளவில் குடித்தால் புற்று நோய் தாக்கும் ஆபத்து இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த தகவல் இங்கிலாந்து மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. குறைந்த அளவில் இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் குடிப்பதன் மூலம் புற்று நோய் பாதிப்பு குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

;