science

img

ஆண்களுக்கான கருத்தடை ஊசியை கண்டுபிடித்து இந்திய சாதனை

உலகிலேயே முதன்முறையாக, ஆண்களுக்கான கருத்தடை ஊசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கண்டுபிடித்துள்ளது. அதை வெற்றிகரமாக சோதித்து சாதனை படைத்துள்ளது.

ஆண்களுக்கான கருத்தடை ஊசி குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டாலும், அது இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது. பிரிட்டனில், ஆண் கருத்தடை ஊசி கண்டறிந்தாலும், கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தியதால், அத்திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், ஆண்களுக்கான கருத்தடை ஊசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கண்டுபிடித்துள்ளது. அதை வெற்றிகரமாக சோதித்து சாதனை படைத்துள்ளது. இந்த ஆராய்ச்சியை மூன்று கட்டங்களாக, மொத்தம் 303 நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், 97.3 சதவீதம் அளவிற்கு, வெற்றிகரமான முடிவு கிடைத்துள்ளது. மேலும், எந்த பக்க விளைவையும் ஏற்படுத்தவில்லை என நிரூபிக்கப்பட்டிருப்பதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த ஆண் கருத்தடை ஊசி, 13 ஆண்டுகள் பலன் தரும் எனவும், இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;