districts

img

சுகாதாரமற்ற முறையில் குடிநீர் விநியோகம்: பொதுமக்கள் ஆவேசம்

பென்னாகரம், ஜூலை 3- ஏரியூர் அருகே உள்ள ஏமனூரில் புழுக் களுடன் கூடிய குடிநீர் விநியோகம் செய்வ தாக குற்றஞ்சாட்டி, அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் அருகே உள்ள நாகமரை ஊராட்சிக்குட்பட்ட ஏமனூரில் 150க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊர், மூன்று பக்கம் மேட்டூர் நீர் தேக் கத்தாலும், ஒரு பக்கம் அடர்ந்த வனப்பகுதி களும் சூழப்பட்டதாகும். இந்த ஊரைச் சேர்ந் தவர்கள் மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக 30 கிலோமீட்டர் தொலை வில் உள்ள ஏரியூர் அல்லது ஆற்றைக் கடந்து சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள் ளது. இதற்கிடையே இப்பகுதியில் கடந்த 25  ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி கட்டப்பட்டது. அதுவும் இடிந்து விடும் நிலையில் உள்ளதாகவும், இதன் காரணமாக இந்த குடிநீர் தொட்டியை  யாரும் சுத்தம் செய்வது இல்லை எனவும், சுத் தம் செய்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகும் எனவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். மேலும், சுத்தம் செய்யாத இந்தக் குடி நீர் தொட்டியின் மூலம் தான் பொதுமக்க ளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரு கிறது. இந்த குடிநீரில் புழுக்கள் வருவதா கவும், துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக் கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த அசுத்த மான நீரை பயன்படுத்துவதால் இப்பகுதி யைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் காய்ச் சல் மற்றும் பல்வேறு வகையான நோய் களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலை யில், அடிப்படைத் தேவைகளை கேட்டால் கூட அலட்சியத்துடன், பொறுப்பில்லாமல் பதில் சொல்லும் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து அப்பகுதி மக்கள் சனியன்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏமனூரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில், குடிநீர் தேவையை தீர்க்க மாற்று ஏற்பாடுகள் செய்து தர வேண்டும். உடன டியாக மருத்துவ முகாம் அமைத்து அனை வருக்கும் உடல் பரிசோதனை செய்ய வேண் டும். 10 ஆண்டுகளாக செவிலியர் இல்லாமல் பூட்டியே கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலை யத்தில் முழுநேர மருத்துவரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர். இப் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது.  மேலும், அதிகாரிகள் யாரும் பேச்சு வார்த்தை மேற்கொள்ளாத நிலையில், அடுத் தகட்டமாக பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவ தாக ஏமனூர் பொதுமக்கள் தெரிவித்துள்ள னர்.

;