திருப்பூர் ஜூலை 3- அலகுமலை கைலாசநாதர் கோ வில் அருகே தீண்டாமை கம்பி வேலியை அகற்றக்கோரி போராட் டம் அறிவிக்கப்பட்டதால் இரு தரப்பி னர் அங்கு திரண்டனர். பொங்கலூர் அருகே அலகும லையில் கைலாசநாதர் கோவில் உள் ளது. இந்த கோவில் முன்பு கொடி கம்பம் மற்றும் தேர் நிறுத்தப்பட் டுள்ளது. இந்த பகுதியில் கம்பி வேலி அமைக்கப்பட்டதற்கு கடந்த 2019-ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த தலித் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைதொடர்ந்து அவர்கள் சார் பில் தாழ்த்தப்பட்டோர் நல ஆணை யத்தில் புகார் செய்யப்பட்டது. இதை யடுத்து தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட் டுள்ள கம்பி வேலியின் இருபுறமும் நுழைவாயில் அமைக்கப்பட்டது. மேலும் கோவிலின் அருகே உள்ள கேட் நிரந்தரமாக மூடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பிரிவி னர் நீதி மன்றதில் வழக்கு தொடுதனர். இதனை விசாரித்த நீதி மன்றம், தற் போதைய நிலையே தொடர வேண் டும் என தெரிவித்தது. இந்நிலையில் விடுதலை சிறுத் தைகள் கட்சியினர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று தீண் டாமை கம்பி வேலி அகற்றும் போராட் டம் மற்றும் தலித் மக்களின் 12 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதயடுத்து பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெற்றிச்செல் வன், அவினாசிபாளையம் ஆய்வா ளர் மணிகண்டன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் தாசில்தார் கோவிந்தராஜன், கோவில் செயல் அலுவலர் சரவணப வன் ஆகியோரும் வந்தனர். பின்னர் நடத்தப்பைட்ட பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் சுசி. கலையர சன், பல்லடம் தொகுதி செயலாளர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண் டனர். இதில் அவர்கள் தரப்பில், இந்த கம்பி வேலியை முழுமையாக அகற்ற வேண்டும். பொதுமக்கள் சென்று வர எந்த விதமான தடையும் இருக்கக் கூடாது. மேலும் கோவி லின் அருகில் உள்ள கேட்டையும் திறந்து விட வேண்டும் என்றனர். இதைதொடர்ந்து வரும் திங்கட் கிழமை அமைதி பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளலாம். அதுவரை அமைதி காக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்று அவர்கள் அங்கிருந்து சென்றனர்.