பொள்ளாச்சி, ஜூலை 3- பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு மருத்துவ மனை நிர்வாகத்தின் பாதுகாப்பு குறைபாடே காரணம் என குழந்தையின் உறவினர்கள் குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி கல்லுக் குழி பகுதியைச் சேர்ந்த யூனுஸ் - திவ்ய பாரதி தம்பதியினருக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் திவ்யபாரதியின் இரண்டாவது பிரசவத்திற் காக பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துமனையில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி யன்று அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கடந்த ஜூன் 29 ஆம் தேதியன்ற சுகப்பிரச வத்தில் பெண் குழந்தை பிறந்தது. தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் இருந்துள்ளனர். இந் நிலையில், ஞாயிறன்று அதிகாலை 4 மணிய ளவில் விழித்து பார்த்தபோது, தனது குழந்தை கானாமல் போனதை கண்டு திவ்ய பாரதி அதிர்ச்சியுற்றார். அப்போது அதே வார்டில் சிகிச்சை பெற்று வரும் அருகிலி ருந்த ஒரு பெண், சனியன்று இரவு 2 மணி யளவில் தான் கழிப்பறைக்கு சென்றபோது, 2 பெண்கள் உள்ளே வந்து சென்றதாக தெரி வித்துள்ளார். உள்ளே வந்த அந்த இரண்டு பெண்கள் மீது சந்தேகம் இருப்பதாக தெரி வித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த திவ்யபாரதி யின் கணவர் யூனுஸ் மற்றும் அவரது உற வினர்கள் மருத்துவமனையை முற்றுகை யிட்டனர். இதனால் மருத்துவமனை முழுவ தும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொள் ளாச்சி மாவட்ட காவல் துணை கண்காணிப்பா ளர் (பொ) செல்வராஜ், வால்பாறை சரக காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் காவல்துறையினர் மருத்துவ மனை நிர்வாகத்திடம் விசாரணையை மேற் கொண்டனர். மேலும், மருத்துவமனை வளா கத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற் றும் மருத்துவமனையை சுற்றியுள்ள வணிக வளாகங்களில் உள்ள கண்காணிப்பு கேம ராக்களின் பதிவுகளை கைப்பற்றி காவல் துறையினர் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து கடத்தப்பட்ட குழந்தை யின் உறவினர்கள் கூறுகையில், பொள் ளாச்சி அரசு மருத்துவமனையில் இந்த கால கட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற் றுள்ளது. இத்தனை பாதுகாவலர்கள், இத் தனை ஊழியர்கள் பணியில் இருக்கையி லேயே குழந்தை கடத்தப்பட்டுள்ளது. எக்கார ணத்தைக் கொண்டும் இதுபோல இனி ஒரு சம்பவம் நடந்து விடக்கூடாது. காவல்துறை யினர் தீவிர முயற்சி மேற்கொண்டு எங்கள் குழந்தையை உடனடியாக மீட்டு தர வேண் டும். அரசு மருத்துவமனை பிரசவ பகுதிக் குள் நுழைய சரியான விசிட்டர் பாஸ் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். மருத்துவமனை வளாகங்களை சுற்றி கூடு தல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அரசு மருத்துவமனை பாதுகா வலர்கள் ஊழியர்கள் திறம்பட செயல்பட வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் பிரசவ வார்டுகளுக்கான பாதுகாப்பை உறுதிப்ப டுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ள னர்.