கோவை, ஜூலை 3- கோவை ரயில் நிலை யத்தில் உபயோகப்படுத்தப் பட்ட பிளாஸ்டிக் பாட்டில்க ளுக்கு முகக்கவசம் இலவச மாக வழங்கும் ‘டிராப் என் டிரா’ என்ற புதிய இயந்தி ரம் அறிமுகம் செய்யப்பட் டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக் கும் விதமாக கோவை ரயில் நிலையத்தில் உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்பப்பெ றும் முயற்சி பயணிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. “டிராப் என் டிரா” என் னும் இயந்திரம் கோவை ரயில் நிலை யத்தின் நடைமேடை எண் 3ல் அறிமு கப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை யின் மூலம் பயணிகள் உபயோகப்படுத் தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை இயந்திரத்தின் உட்பகுதியில் செலுத்தி, இலவசமாக ஒரு முகக்கவசம் அல்லது எடையை சரிபார்க்கலாம். இந்த இயந் திரத்தின் உட்பகுதியில் செலுத்தப் பட்ட உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ் டிக் பாட்டில்கள் துண்டு துண்டாகப் பட்டு, தனி தொட்டிகள் மூலம் மறு சுழற்சி செயல்முறைக்கு சேகரிக்கப் படும். தமிழ்நாட்டைச் சேர்ந்த டிராப் என் டிரா என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், இந்த புதுமையான தயாரிப்பை உற் பத்தி செய்கிறது. இந்த இயந்திரம் கோவை ரயில் நிலையத்தில் நிறுவப்படு வதற்காக லேடீஸ் சர்க்கிள் நிறுவனத் தால் ஸ்பான்சர் செய்யப்பட்டது.