districts

img

சாலையில் கிடந்த ரூ.40,000 பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த சிறுமிக்கு பாராட்டு

திருப்பூர், ஜூலை 3- சாலையில் கிடந்த ரூ.40,000 பணத்தை காவல்துறையி டம் ஒப்படைத்த சிறுமியின் செயலை கண்டு காவல்துறையி னர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டி தெரிவித்த னர்.  பல்லடம் பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ்,  நித்தியலட்சுமி தம்பதியினரின் மகள் தர்ஷினி (13). இவர் பல்லடத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தர்ஷினி சனியன்று மதி யம் தனது தாய் நித்திய லட்சுமி மற்றும் உறவுக்கார பெண்  பிரியா ஆகியோருடன் துணி எடுக்க பல்லடத்தில் காவல்  நிலையம் எதிரே உள்ள துணிக்கடைக்கு சென்றுள்ளனர். அப்போது, சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.40,000  பணத்தை கண்ட சிறுமி தர்ஷினி, அதனை எடுத்து தனது  தாயிடம் கொடுத்துள்ளார். பின்னர் தாய், மகளும் துணிக் கடையின் எதிரே உள்ள பல்லடம் காவல் நிலையத்திற்கு சென்று கண்டெடுத்த ரூ.40,000 ரொக்க பணத்தை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பள்ளி சிறுமியின் இந்த செயலை கண்டு காவல்துறையினர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டி தெரிவித்தனர்.

;