states

img

சொன்னதைச் செய்து முடிக்க கேரள அரசு உறுதி பூண்டுள்ளது.... தாமஸ் ஐசக் பேச்சு....

திருவனந்தபுரம்:
கேரள அரசின் நிதிநிலை அறிக்கை மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்று நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்தார்.

எதிலும் குறை காணும் நபர்கள் கூட பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதை செயல்படுத்து வது குறித்து எதிர்பார்க்கிறார்கள். பட்ஜெட் டை விமர்சிக்கும் யுடிஎப் உறுப்பினர்கள், தங்களுக்கு என்ன திட்டம் என்று சொல்ல வேண்டும். கேரளாவின் வளர்ச்சிக்கு வேறு என்னதான் செய்ய வேண்டும் என்று யுடிஎப்தலைவர்கள் கூறுகிறார்கள்?. என்று கேள்விஎழுப்பிய நிதி அமைச்சர் பட்ஜெட் அறிவிப்பு களுக்கு எதிரான விமர்சனங்களுக்கும் பதி லளித்தார்.

வேலைவாய்ப்பு சாத்தியமா, இவை அனைத்தும் அதீத நம்பிக்கையுடன் இருக்கிறதா என்கிற விமர்சனம் முதன்மையானது. பணம் எங்கிருந்து வரும் என்று கவலைப்படுவது இரண்டாவது. தேர்தலை நோக்கமாக கொண்டு பணம் கையில் இல்லாமலே காட்டப்படும் மாயவித்தை என்கிற விமர்சனம் மூன்றாவது.அறிவிப்புகளில் எது சாத்தியமற்றது. உலகளாவிய வேலைவாய்ப்பு முறை பெரும்மாற்றத்தை சந்தித்து வருகிறது. அதை யாரும்மறுக்கமாட்டார்கள். அந்த சூழ்நிலையை கேரளம் அறிவியல் பூர்வமாக பயன்படுத்த முயல்கிறது. அதற்கு திறனும், ஆற்றலும் கொண்ட ஒரு நிறுவனத்தை உருவாக்க முடியுமா என்பது கேள்வி. ‘கிப்பி’ என்பதே அதற்கான பதில். அது பற்றி எந்த சந்தேகமும் இல்லை. கேரளாவின் எதிர்காலம் அறிவுசமுதாயமே. அதைநோக்கி நாம் பயணிக் கிறோம். அதுதான் முன்னோக்கிசெல்லும்வழி.

அது ஏற்கனவே சொல்லப்பட்டாலும், இப்போதுதான் செயல்படுத்தப்படுகிறது. ஏனெனில் அதற்கு முன் நிபந்தனைகள் உள்ளன. நமது பொருளாதாரம் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். இணைப்பு, மின்சாரம் மற்றும் சிறந்த போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும். தொழில்துறை பூங்காக்கள் இருக்க வேண்டும். நாம் அதற்குத் தயாரானால் மட்டுமே இந்த மாற்றத்தை உருவாக்க முடியும். கிப்பி அந்த உட்கட்டமைப்பைத் தயாரிக்கிறது. மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில்,கேரள உட்கட்டமைப்பில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும்.நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் சாத்தியமானவை என்பதில் சந்தேகமில்லை. இது நடைமுறைக்குரியது என்று நான் மட்டும் கூறவில்லை. 22 நாடுகளைச் சேர்ந்தநிபுணர்கள் இது குறித்து எனது முகநூல் பக்கத்தில் 23 ஆம் தேதி விவாதிக்கின்றனர். இது பல நிலைகளில் நடைபெறவிருக்கும் விவாதங்களின் முதல் கட்டமாகும். பிப்ரவரியில் இதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த அரசு வந்து இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

திட்டங்களுக்கு பணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு ஒரு பதிலும் உள்ளது. 20 லட்சம்பேருக்கு வேலை வழங்குவதை நோக்கமாகக்கொண்ட கே-டிஸ்கின் மாற்றம். இதற்கு ரூ.200கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ரூ.250 கோடியின் சில முன்னுரிமைகளை மாற்றுவதன் மூலம் பயிற்சிக்கான பணத்தைக்கண்டறியலாம். அடுத்தது வாழ்வாதாரங்களின் பிரச்சனை. 100 நாள் நூறு திட்டம் 1.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போகிறது. இந்த வேலை உருவாக்கம் கூடுதல் பணத்தைசெலவழித்து ஏற்படுத்துவது அல்ல. ஒரு நிரல் அறிவிக்கப்பட்டதும், தற்போதுள்ள திட்டங்களுடன் இணைந்து அந்த திட்டங்களை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டியது அவசியம். 

உதாரணமாக, ஒரு ஏழைக் குடும்பத்திற்கு வீடு இல்லையென்றால், லைப் திட்டம் வீட்டுவசதி வழங்கும். உணவு இல்லை என்றால், ஜனகிய ஓட்டல் மூலம் உணவு வழங்கப்படும். வீட்டில் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இருந்தால், தற்போதுள்ள திட்டங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். திட்டங்களை இணைக்க வேண்டும். அதில் பற்றாக்குறை இருந்தால், அதை நிரப்ப கூடுதல் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே திட்டத்தில் பணம் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. பணம் இருக்கிறது என்று நானல்லவா சொல்ல வேண்டியது? நான் அதுகுறித்து கவலைப்படவில்லை. மற்றவர்களுக்குத்தான் கவலை.இடதுசாரிகளின் மாற்றையே இந்த நிதிநிலை அறிக்கை முன்வைக்கிறது. ஏழைகளின்நலன் மிக முக்கியமானது. சாத்தியமற்றது என்று கருதப்பட்டவை சாத்தியமாக்கப்படுகின்றன. உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி திரட்டப்படும். மக்களுக்கு நல்ல வருமானத்தை உறுதிசெய்வதற்காக புதிய வேலைகள் மற்றும் தொழில்களை உருவாக்குவதே இது. அதை நோக்கி எவ்வாறு நகர்த்துவது என்பதற்கான புதிய பாதையை நாங்கள் வகுத்து வருகிறோம். இதற்கு சர்வதேச சாத்தியங்கள் பயன்படுத்திக் கொள்ளப்படும். நம் நாட்டில் முதலீட்டை ஊக்குவிக்க வரி சலுகைகள் உள்ளிட்ட தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடக்கும்என்று மக்களுக்கு எதிர்பார்ப்பும் நம்பிக்கையையும் அளிப்பதாக சிலர் பயப்படுகிறார்கள். இந்த நிதிநிலை அறிக்கை ஒரு புதிய நிகழ்ச்சிநிரலை கேரள மக்கள் முன் வைக்கிறது.

;