states

img

உத்திரபிரதேசத்தில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் பலி

உத்திரபிரதேச மாநிலத்தில் திருமண வீடு ஒன்றில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
உத்தரப் பிரதேசம் மாநிலம் விக்ரம்பூர் கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அங்கு எதிர்பாராத விதமாக எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக வெடித்து சிதறியது. இந்த விபத்தில், ஒரு சிறுமி, 3 பெண்கள் என நான்கு பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 3 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;